search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மலேசிய ஓபன் பேட்மிண்டன்"

    • ஆண்கள் இரட்டையர் பிரிவில் நேற்று அரையிறுதி ஆட்டம் நடைபெற்றது.
    • இதில் தென் கொரிய ஜோடியை இந்திய ஜோடி வீழ்த்தியது.

    கோலாலம்பூர்:

    மலேசிய ஓபன் பேட்மிண்டன் போட்டி கோலாலம்பூரில் நடைபெற்று வருகிறது. இதில் ஆண்கள் இரட்டையர் பிரிவில் நேற்று நடந்த அரையிறுதி ஆட்டத்தில் உலக தரவரிசையில் 2-வது இடம் வகிக்கும் இந்தியாவின் சாத்விக் சாய்ராஜ் ரங்கி ரெட்டி-சிராக் ஷெட்டி ஜோடி, உலக தரவரிசையில் 3-வது இடம் வகிக்கும் தென் கொரியாவின் காங் மின் ஹியுக்-சியோ சியுங் ஜே ஜோடியுடன் மோதியது.

    இந்த ஆட்டத்தில் சாத்விக்-சிராக் ஷெட்டி ஜோடி 21-18, 22-20 என்ற செட் கணக்கில் தென் கொரிய ஜோடியை வீழ்த்தி இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது.

    மலேசிய ஓபன் பேட்மிண்டன் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்ற முதல் இந்திய ஜோடி சாத்விக்-சிராக் ஷெட்டி ஜோடி என்பது குறிப்பிடத்தக்கது.

    மலேசிய ஓபன் பேட்மிண்டன் போட்டியில் இன்று நடைபெற்ற அரையிறுதி சுற்றில் இந்தியாவின் பி.வி.சிந்து, ஸ்ரீகாந்த் கிதாம்பி தோல்வியடைந்து கோப்பையை வெல்லும் வெற்றி வாய்ப்பை இழந்தனர். #MalaysianOpenBadminton #Pvsindhu #KidambiSrikanth
    கோலாலம்பூர்:

    மலேசிய ஓபன் பேட்மிண்டன் அரையிறுதி போட்டி கோலாலம்பூரில் இன்று நடைபெற்றது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் பி.வி. சிந்து, உலகின் நம்பர் 1 வீராங்கனையான சீனாவின் தை டுசு யிங் மோதினர். மிகவும் சிறப்பாக விளையாடிய சீன வீராங்கனை சிந்துவை தோற்கடித்து இறுதி சுற்றுக்கு முன்னேறினார். சிந்து சிறப்பாக விளையாடினாலும் அவரால் வெற்றி பெற முடியவில்லை. இது தையுடன் மோதி சிந்து தோல்வியடையும் 5 வது போட்டி இதுவாகும்.

    இதற்கிடையில், ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் ஸ்ரீகாந்த் கிதாம்பி தோல்வியடைந்தார். இவர் ஜப்பானின் கெண்டோ மோமட்டவை எதிர்க்கொண்டார். ஸ்ரீகாந்த் 13-21, 13-21 என்ற செட் கணக்கில் தோல்வியடைந்தார். இதன் மூலம் இந்தியாவைச் சேர்ந்த இருவரும் இறுதி போட்டிக்குள் நுழையும் வாய்ப்பை இழந்தனர். #MalaysianOpenBadminton #Pvsindhu #KidambiSrikanth
    ×